தாயார் கடன் பெற்று விட்டாள்
தந்தை கடன் வளர்த்து விட்டார்
குருவின் கடன் படிப்பு தந்தார்
நாட்டின் கடனை யார் தீர்ப்பார் ()
யாரோ கட்டிய நதி கரைகள்
அசுத்த படுத்திய அபராதம்
யாரோ கட்டிய கோயில்களை
கொள்ளை யிடிக்க அபராதம்
யாரோ கட்டிய சாலைகளில்
தோண்டி பள்ளமும் அபராதம்
யாரோ கட்டிய மன்றங்களில்
குடித்தனம் கொள்ளை அபராதம்
கடனை ஏற்றும் வழியிவைகள்
கடலும் கங்கையும் போக்காது ()
செல்வம் சேர்ந்த பின்னாலே
பெற்றவர்களை உடன் மறப்போரும்
பதவி யாசை புறங்கையூடல்
பணத்தை நகைகள் வைப்போரும்
பொதுநலச் சொத்து அழிப்போரும்
பிறர்வழி பாடுகளை இடிப்போரும்
பெண்களை ஏய்த்து மணப்போரும்
பிள்ளையை கெடுத்து வளப்போரும்
கடனைத் தீர்க்க முடியாது
கடவுளை மறுத்தால் விடுவானா ?
காலன் அழைக்கும் போதிவரின்
காசோலை களுமே செல்லாது
கூப்பிட உடனே வருபவரும்
கூட வந்திட முடியாது
கட்சி கட்டை எரியுமுன்னே
தலைமை பதவி இருக்காது
கொள்ளை களவு பயின்றதனால்
அறநெறி வாசனைத் தெரியாது
பிரிவினை நரியென செய்வதெல்லாம்
கடவுள் சபையினில் தப்பாது
பதவியின் வெறியினில் செய்ததனால்
பாவம் புதைத்தும் மறக்காது

comment is always in since science is interesting
ReplyDeleteplanets are miracle but comment using oracle
ReplyDelete