Sunday, 14 May 2023

சரோஜினி நகர் குடமுழுக்கு கோலாகலம்

 

சித்தியும் புத்தியும் சக்தியும் தருவான்

வித்தையே விநாயகன் அருள்.....1

கற்பனை கட்டும் கவிதையை கொட்டும்

விற்பனன் விநாயகன் அருள்....2

அருகம் புல்லெடுத்து அர்ச்சனை செய்யினும் 

கனகமாய் விநாயகன் அருள்....3

நம்பிக்கை வேண்டும் நல்லறம் தூண்டும்

தும்பிக்கை விநாயகன் அருள்..4 

சிதறிடும் தேங்காயில் தீறாத  தீவினையோ 

கதறிடும் விநாயகன் அருள்...5

வெற்றிகள் தேடிவரும் தொட்டது கைதுலங்க 

பற்றுவீர் விநாயகன் அருள்.....6

தர்மவினைக் காப்பாற்ற கர்மம்வினைக் கைதூக்க

நற்பவி  விநாயகன் அருள்..7

தீராத துன்பம் தானாக விலகும்

மாறாது விநாயகன் அருள்..8 

காரணம் அறியாது கவலைகள் தொலைக்க 

கரணமிடு விநாயகன் அருள்....9

இன்றே வருவான் விடைகள் தருவான்

நன்றே விநாயகன் அருள்...10

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்