ஓமெனும் மூலம் ஒளிந்திடும் மூலம்
விரிந்திடும் மூலம் ஒடுங்கிடும் மூலம்
வெளியெனும் மூலம் உள்ளெனும் மூலம்
ஒலியெனும் மூலம் ஒளியெனும் மூலம்
கருவெனும் மூலம் திருவெனும் மூலம்
உருவெனும் மூலம் அருவெனும் மூலம்
மூச்செனும் மூலம் முதிர்ந்திடும் மூலம்
கம்மெனும் மூலம் கணபதி தானே 1/100
ஒன்றென தெரிவான் இரண்டென தெரிவான்
உருவென தெரிவான் அருவெனத் தெரிவான்
மறைந்திட தெரிவான் தெரிந்திட தெரிவான்
மூடினும் தெரிவான் திறப்பினும் தெரிவான்
அடியினில் தெரிவான் முடியினில் தெரிவான்
யாகத்தில் தெரிவான் யோகத்தில் தெரிவான்
நிட்டையில் தெரிவான் நெற்றியில் தெரிவான்
வெற்றியில் தெரிவான் வேலவன் தானே 2/100
ஓர்மையில் வசி நேர்மையில் வசி
உள்ளிலே வசி உருவிலே வசி
அடக்கியும் வசி இயக்கியும் வசி
கதிரினில் வசி மதியினில் வசி
பிரித்திட வசி சேர்த்திட வசி
அறிந்திட வசி மறைந்திட வசி
மலையினில் வசி குகையினுள் வசி
ஓமென வசி ஒளிதரும் சிவமே ...... 3/100
அன்னையே சக்தி பிள்ளையும் சக்தி
சேர்ந்தவள் சக்தி ஈன்றவள் சக்தி
இயக்கமும் சக்தி மயக்கமும் சக்தி
சிந்தையும் சக்தி செயல்திறன் சக்தி
காலமும் சக்தி நேரமும் சக்தி
காரணம் சக்தி கலைகளும் சக்தி
களிப்பும் சக்தி காப்பாயும் சக்தி
அன்பும் சக்தி ஆனந்தம் சக்தி
அமுதமும் சக்தி அன்னையே சக்தி 4/100
தவழ்வது அறிவு
பார்ப்பது அறிவு
உறவினை அறிந்து
உணர்வது அறிவு
கற்பது அறிவு
கேட்பது அறிவு
படிப்பது அறிவு
நடப்பது அறிவு
தேர்வது அறிவு
தெளிவது அறிவு
நல்லறம் பயின்று
நூல்கள் பயிலினும்
நட்பினை அறிந்து
வாழ்தல் பேரரறிவே ....5/100
ஆய்வு இலாத நாளை
ஓய்வு இலாத ஆசை
சாய்வு இலாத பதவி
வாய்வு இலாத வயிறு தேய்வு இலாத செல்வம் தோய்வு இலாத கர்வம்
காயம் இலாத காயம்
சாயம் இலாத ஆடை
நியாயம் இலாத நீதி
நேயம் இலாத சாதி
மாய்வு இலாத மாயை
பேயுடன் வாழும் பிரேதமே
....8/100

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்