Tuesday, 16 May 2023

மயில்மேல்

நெற்றியில் திருநீறும் 

நெஞ்சினில்  மயில்வேலும் 

நாவினில் சரவணபவனென்றேன் 

நாளெல்லாம் வெற்றிதான் 

நாளெல்லாம் வெற்றிதான்  ()


ஓமெனும் பிரணவம்  

நாமென்று சொன்னவன் 

தந்தைக்கே சுவாமியாய் 

அருமந்திரம் தந்தவன்

குன்றத்தில் இருந்தாலும் 

குமரனாய்   இருந்தாளும் 

சண்முகா  சரவணனே 

சடுதியில்   காத்திடப்பா    ()


குருவாய்   வருவாயோ 

ஒருவாய்    மலர்வாயோ 

கருவாய்   கவிபடித்தும் 

காத்திட  வைப்பாயோ 

குற்றங்கள்  செய்தாலும் 

மன்னித்து  மறைப்பாயோ

குறைகளும்  வாராமல் 

குடைகொண்டு காப்பாயோ  ()


 

முருகா முருகாவென 

செவிகளில் சேர்ப்பதற்கு 

உருகிட தமிழ்தூது

அருளுடன்  விரைவதற்கு

சங்கரா சிவ சிவா 

சண்முகா சரவணா 

இனிதாமதம் எதற்கு 

மயில்மேல் வருவதற்கு

 () 




No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்