மனக்குதிரை மேல்ஏறி மண்குதிரை தானடக்கி
அக்குதிரை அகங்காரம் அன்புடன் தானொடுக்கி
பொற்குதிரை ஆக்கியதை புலனடங்க மேயவைத்த
நெற்குதிரில் பொற்குவிய மாற்சோலை அழகனாமே ...........1
சாட்டை யெடுத்து சண்டித் தனமெலாம்
வேட்டை ஆடவைத்து வெகுளியில் ஆறவைத்து
கேட்டை அழித்து கோட்டைக் கதிபதியாய்
ஏட்டை எழுதியவன் மாற்சோலை அழகனாமே....2
தங்கை கைபிடித்து கன்னிகைத் தானமிட
கங்கை வைகையதை கடிவாளம் பிடித்தபடி
நங்கை திருமகள் நகையதை அணிந்திடவே
இங்கே விரைந்தோன் மாற்சோலை அழகனாமே....3

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்