இலையில் இட்டவுடன் நிரப்ப மறந்து
சமையல் செய்வதும் பணி..1
சாத்திரம் கற்றல் மறந்து இப்போது
பாத்திரம் விளக்கி பயில்...2
ஆத்திரம் கொண்டு அடக்கியது சென்று
தோத்திரம் மனையெனத் துதி.3
துணைவியை விரட்டிய பாட்டன் இன்று
மனைவியை சேவித்த பேரன்...4
வேலைக்கு சென்றிடு திரும்பிட அந்தியில்
வேளைக்கு முந்தியே சமை....5
சுழன்றிட வேலைக்கு ஓய்வில்லை கடிகாரம்
கழன்றிட முள்ளுக்கு முக்தி.....6
அம்மியை மிதிக்க அழைத்த நிலைபோய்
தும்பியை பிடித்தது ஆசை.....7
அம்பது சுற்றென முறுக்கு கேட்டவரே
தெம்பது இல்லாது தேடு..8
பெண்வீடு பொன்னென கறந்த பாவமே
கண்ணோடு காணாத வரன்..9
திருமணம் என்பது அன்பறம் வணிகமாய்
மறுமணம் ஆக்கியது யார்..10

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்