Monday, 7 October 2013

கொலுவிருக்க வந்தனளே

சக்தி ரதத்தில் தேவியர்களுக்காக‌ என்னுடைய எளியத்  தமிழ் தோரணங்கள் !  

கொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜ‌
கொலுவீற்று  அரியணையில் ராஜேஸ்வரி
தொழுமடியார்  அன்பில் சக்திரதமேறி - தினம்
பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()

படியென்று பலகலைகள் பயில வைத்தாய்
படிபடியாய் படியேற்றி உயர‌ வைத்தாய்
அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்தி
வடிவெடுத்து அடியார்க்கு  நலம‌ளித்தாய் ( )

மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்
அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்
கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்
நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )

நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்
நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்
தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்
தவமென்று நிறைவேற்றி  அருளளித்தாய்()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்