வாருங்கள்
பலகோடி சேர மகளிர் நிலமேக!
பாடுங்கள் தமிழாள் வாழ! நிலத்து நலமாக
!
பருவங்கள்
மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை
புருவங்கள்
ஏறும் அறிவீர்!அவள் புன்னகை
சேர்க்கை ()
பேதைமெய் சிறுமிகுறுமி பாலை
வடிவெடுத்தாள் (5-7)
பெதும்பையே ஆகத்தருவி தும்பை நுனிபிடித்தாள்
(8-11)
மங்கையாய் பருவமெய்தி பெண்மை
பெயர்ந்தாள் (11-13)
மடந்தையாள் மாந்தளிராகி மலராய் சிரித்தாள்
(14-19) ()
அன்னமன்
னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)
தெரிவை
எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)
பேரிளம்பெண் அன்னை
யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)
நுங்கையாகி நற்றமிழ்
எழுதிட கற்று கொடுத்தாள் ()
நங்கையாகி
உறவுகள் ஏற்று பெண்ணில்
சிறந்தாள் - மாலன்
தங்கையிவளே
! மகளாய் பிறந்தாள் சக்தி
மகிமை!
முதுமையென
முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய் இதைக்கவியில்
வடிக்க தந்தேனுவமை ()
நங்கையாகி
உறவுகள் ஏற்று பெண்ணின்
பெருமை - மாலன்
தங்கையிவளே
! மகளாய் பிறந்தாள்! சக்தி
மகிமை !
முதுமையென
முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய் இதைக்கவியில்
வடிக்க தந்தேனுவமை ()

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்