Monday, 2 September 2013

பாடுங்கள் தமிழாள் வாழ!

வாருங்கள் பலகோடி சேர    மகளிர்    நிலமேக!

பாடுங்கள்  தமிழாள்  வாழ!   நிலத்து   நலமாக !

பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை

புருவங்கள் ஏறும்  அறிவீர்!அவள்  புன்னகை சேர்க்கை ()



பேதைமெய்     சிறுமிகுறுமி  பாலை வடிவெடுத்தாள் (5-7)

பெதும்பையே  ஆகத்தருவி  தும்பை  நுனிபிடித்தாள் (8-11)

மங்கையாய்     பருவமெய்தி  பெண்மை பெயர்ந்தாள் (11-13)

மடந்தையாள்  மாந்தளிராகி  மலராய்  சிரித்தாள் (14-19) ()



அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)

தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)

பேரிளம்பெண்  அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)

நுங்கையாகி  நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()

 நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணில் சிறந்தாள் - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்  சக்தி மகிமை!
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணின் பெருமை - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்சக்தி மகிமை !
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை

புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்