Monday, 2 September 2013

அப்பா (தந்தையர் தினத்தில்)

நிறுத்தி சொன்னால் பாசம் தெரியும்
மெதுவாய் சொன்னால் கடினம் விலகும்
கத்தி சொன்னால் தனிமைத் திணறும்
கதறி சொன்னால் விலகல் புரியும்

நீட்டி சொன்னால் நிறைவென அர்த்தம்
நினைத்து சொன்னால் ஞாபகத் தருணம்
அழகாய்ச் சொன்னால் அன்பளிப்பாலோ ?
அடுக்காய்ச் சொன்னால் ஆச்சரியத்தாலோ !

சொல்லி பாருங்கள் வாயினில் - மனத்தில்
பொருளைக் காணலாம் தந்தையர் தினத்தில்
தந்தையர் ஆனதுஎல்லாம்  - புவியில்
முந்தைநல் வினைகளின் மூலப்பயனே!
!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்