Monday, 2 September 2013

அன்பாலே திருத்தப் பாருங்கள்

அடி நாக்கிலே நஞ்சு கள்வைத்து,
 நுனி நாக்கிலே அமிர்தமாக்குவார்
பேசும் போதிலே சிரிப்பைக்காட்டி
கூசும்படியதை  வஞ்சமாகுவார்
யாரைப் பேதை மனம் நம்பும்
நீர்நிலை யில்கண் குழம்பும் ()

கொட்டி திட்டிவிடும் எதிரிநண்பரே
சிரித்து கெடுக்கும் நண்பர் ஏதிரியே
போற்றி போற்றியென புகழைப்பாடி
தூற்றினார் திரைமறைவில் கோடி
வீற்றிருப்பார் நம் பக்கம்
தான்களிப்பார் நம் துக்கம்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்
அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

கண்கள் காண்பதுவும் பொய்யானால்
காதில் கேட்பதுவும் பொய்யானால்
சிரித்து வாழ்தத்துவதும் பொய்யானால்
துதித்து கலப்பதுவும் பொய்யானால்
வாழ்க்கைத் தான் தடுமாறும்
வழக்கில்  நாளும் ஏமாறும்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்

அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்