Friday, 17 May 2013

அறுபடை ஆண்டோன் துதி

ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா – swami malai
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாள
ும் பழனிபாலா - pzhani
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா - Thiruchenthur
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா – thiru thanikai

நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா – thiruparang kuntram
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா – pazhamuthir solai
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே

 

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்