Friday, 17 May 2013

பூரணமாய் வாழ்கவென

மாசி திங்களிலே மலர்களின் காலம்

தூசி தில்லியிலே மணமகள் கோலம்


வீசி விளையாடும் குளிரோடு நேரம்


பேசி அரசியலும் பாதீடுகள் போடும்
 


வாசி யென்றெனவே வந்தச்செம் மொழியால்

ஆசி கூறிடவே அன்புடன் இன்மொழியாள்


நேசி க்கும்நாடு நிமிரவைக்க மின்வழியால்


பூசி க்கவந்தாள் ! பூரணமாய் வாழ்கவென!!
 


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்