Friday, 17 May 2013

தையினிலே சேர்ந்தாள்

செங்கதிரின் வீச்சினிலே மங்குபனி நீர்க்கும்
சிங்கத்தமிழ் கர்ஜனையில் தில்லியினி வேர்க்கும்
நங்கையிவள் பதின்மூன்று வயதினிக்க பூத்தாள்
மங்கையரும் தையலிவள் தையினிலே சேர்ந்தாள்


தங்கவிலை ஏறிடினும் அங்கமெங்கும் பூட்டி
மங்களமும் அலங்கரிக்க மேடைநடை காட்டி
சங்கடங்கள் தீர்க்கும்வி நாயகனைக் கூட்டி
சங்கங்களில் சங்கமித்தாள் சேர்த்துநலம் தீட்டி


கூட்டு பொங்கல் வீட்டு பொங்கல் நாட்டுபொங்கலோடு
பாட்டு பொங்கல் மாட்டு பொங்கல் ஆட்ட‌பொங்கலோடு
பானைப் பொங்கல் விசில் பொங்கல் ஒவன் பொங்கலுண்டு
மானைப் பழிமை விழிகள் ஆவலுடன் உண்டு

உண்டதெல்லாம் ஊட்டமுடன் உயிர்வளர்க்க வேண்டும்
கண்டதெல்லாம் நம்வசமாய் களிப்பளிக்க வேண்டும்
இந்தமுறை தலைமுறைகள் தமிழைகற்க வேண்டும்
அந்தமுறை வருமுறைக்கும் தமிழுரைக்க வேண்டும்

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்