அம்மா எனும் மந்திரம்
ஆனந்தசுகம் தந்திடும்
சும்மா மனம் தன்னிலே
அருள் ஆற்றலை தந்திடும் ()
கருப்பை முதற்கொண்டு கல்லறை வரைவந்து
நிழலாக துணைத் தந்திடும்
இருப்பை நிறையென்று
வருத்தங்களைக் கலைந்து
ஆறுதல் பலம் தந்திடும்
பிறக்கின்ற நியதிக்கும்
குறிக்கோளை நியமிக்கும்
இறக்கின்ற வரை நீடிக்கும்
இயலாத போதும் நமை
எழுந்தாட வைத்து விடும்
நலமான யாவும் தரும்
()
அருகினிலே அமர்ந்து
அவளிடம் அளிக்காத
பதவிக்கும் பலனில்லையே
முதுமையில் அவள்வாடும்
வலிக்கும் மருந்திடா
கைகளில் பயனில்லையே
அழைக்கின்ற போதவளை
வதைக்கின்ற சொல்லுதிர்த்த
பாவத்தின் முடிவில்லையே
உள்ளத்தை உதைத்துவிட்டு
செல்வத்தில் செல்வாக்கில்
வாழ்வதில் பொருளில்லையே ()

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்