தமிழ் விருப்பில் வளர்வதோ சங்கமிலை
தமிழ் விடுப்பிலோ எது ?.......1
இரந்து வாழ்ந்து வளர்த்தார் பெருநிதி
இறந்த பின்னும் வருமோ......2
கோட்டைக்கு அரசர் நாட்டுக்கு மந்திரி
கூட்டை விட்டதும் யார்........3
குற்றேவல் சேவகர் கூட்டமும் குட்டமாம்
குற்றமாய் செய்த வினை ......4
நான்மறை இழித்தோர் அறமுறை அறுத்தோர்
வான்முறை வன்முறை யாகும்....5
இறந்தவரை மாலையிட்டார் மேடையிட்டார் புகழ்ந்தார்
இருப்பவரோ அரங்கத்து ஓரம்...6
தத்திதத்தி பேசிடும் தலைவர் தமிழில்
தத்தளித்த சங்கத்தில் சபை ....7
புகழும் பொன்னாரம் பொற்சார்வை பூங்கொத்து
பழகும் தினசரி படம்......8
கைபிடிக்க கால்பிடிக்க கடைபிடிக்க குடைபிடிக்க
பைபிடித்தால் செயலாளர் பணி....9
தாய்மொழி தத்தளிக்க வாய்மொழி தப்பளிக்க
சேய்மொழி எப்படி தேறும்......10

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்