Saturday, 12 November 2022

காஞ்சிமகானடி விண்ணப்பம் ( சத்தியமணி )

 கலியோடு வாழும்நிலை களைப்பாகும் வாழும்நெறி

வலியோடு அந்தணர்தம்

மனந்தனை துன்புறுத்தும்

பழியோடும் ஆட்சியறம்

பலியாகும் ஆகமங்கள்

விழியோடும் வேதனையை

விரைவாகத் தீர்ப்பாயோ

    வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ     1/5

பரிகாசம்  பலசெய்தும்

சதிகாரம்  சில எய்தும்

நிகழ்கால தரும்துன்பம்

எதிர்காலம் புரியாமல்

மறையோதி வருமைக்குள்

வைதீகம்  தர்ப்பையுடன்

இருப்போரின் வாழ்வழிக்க

அறநிலை  அழவைக்கும்

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ ..  2/5

பொருமையும் பிறப்புணர்ந்து

அருமறைகள்  தினமொழிய

முக்காலம்   கதிரவனின்

வந்தனம் செய்பவர்க்கு

இக்காலம் பெருஞ்சுமையா

ஆக்குவதும் அறமாமோ

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ    3/5

கோயில்கள்  மூலவரின் 

அணிகலனும் களவுபெறும்

வாயில்வரும் உற்சவரின்

சிலைகளுமே  மாறிவிடும்

ஆகமமும்   நியம்பங்களும் 

தர்மங்களும் கேலியுரும்

  வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ  4/5


பொய்யெலாம் பலதிரித்து  பொறுமைக்கு  வலிகொடுத்தார்

கையெல்லாம்  கறைபடித்து  ஆன்மீகம்  பலிகொடுத்தார்

வைதாலும் அமைதியென  இருப்பவரை வதைத்தார்   

யாகத்தில்  வளர்நெருப்பை  வயிற்றினில்  எரிவதுவோ 

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ   5/5






              

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்