Monday, 14 November 2022

கீதம் கண்ணனை

 கீதம் 

ராகம்  முகாரி

தாளம்  ஆதி

(சத்தியமணி)


கண்ணனைத்  தேடுகிறாள்  ராதை 

காதலினால் படும் துய   ருடன் அவதியில் (  )


கண்ணமெலாம் ஈரம் இமைகளிலே சோகம்

இன்னுமேன் உயிரென்று பிதற்றிடும் மனதோடும்  (  )


இனிமையில் பலநினைத்து அலங்கரித்த கோலம்

தனிமையில் தலைகுனிந்து அவதியுறும் நேரம்

தெரிவதெலாம் ஆயனின் பிம்பென்ற போதும்

துடிதுடித்து மாயனை சிறைபிடிக்க தோன்றும்   (  )

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்