Saturday, 26 November 2022

அழகன் முருகனே

 அழகன் முருகனே அவனென் தலைவனே

பழகும் தமிழிலே கொஞ்சும் குமரனே

நெஞ்சம் முழுவதும் நிறைந்திடும் கந்தனே

 நெற்றி குங்குமம் தனிலொருசு கந்தனே  ( ) 


மயிலை ஆடவைத்து மனதை ஆடவைத்தான்

மழைதரு மேகமாய் மடலில் நீரவிழ்த்தான்

இதழினில் தேனவிழ்த்தான் இதமாய் பாடவைத்தான் 

 இருவிழி வேலமைத்தான் 

இளமைத் தெரியவித்தான் ()


பன்னிரு விழிகளுமே என்னை காணவரும் 

முன்னிரு தோள்களிலும் மாலை மாற்றவரும் 

தன்னரு கினிலழைத்து 

தழுவிட மயிலமர்ந்து

என்னுடன் ஆளவந்தான்  இன்முகம் காட்டுகின்றான் ( )

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்