Monday, 14 November 2022

கீதம் தேச ஒற்றுமை

பிரிவினையை தூண்டுவது  யாரோ ?

பிழையாக மண்ணில் பிறந்தாரோ ? 

விளையாட்டு வினையாகு மறியாரோ 

தலையாட்டி பொம்மை களைப்போலோ ?  


நல்லவிதை ஊன்றுவதை விட்டு

நஞ்சுவிதை தூவுவது பாவம்

கள்ளமன மானதுடன் வஞ்சம்

கட்டிபிடித்தாளுவது சாபம்

குள்ளநரி போலவரும் துரோகம்

குலைத்துவிடும் நாட்டுவளங் காணீர்

சொல்லவரும் தீர்ப்புகளைப் பாரீர் 

சுதந்திரமா தந்திரமா கேளீர்   ( ) 


நற்புத்தி செயலுறுவை விட்டார்

நயயுத்தி களைவெளியில் போட்டார்

மண்நலத்தை காப்பதுபோல் நஞ்சை

தன்நலத்தை சேர்ப்பதிலே சிந்தை

தர்மம் அறம் வாழ்வுநெறி

எல்லாம்

தங்கிடவே ஒன்றுபட வாரீர்  ( )

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்