அவமானம் படும்போது
அவதானம் புரியணும்
அசிங்கம் செய்வோர்முன்
அவதாரம் காட்டணும்
புண்படுத்த முயல்வோர்முன்
பண்படுத்தி வாழணும்
மண்படுக்கும் முன்னால்நாம்
மனிதாஎடுத்து காட்டணும்
தள்ளிவிடும் போதெழுந்து
தனித்துவத்தை கூறனும்
வீழ்ந்தபின் விசையுடனே
வெற்றிவாகை சூடணும்
வெட்டியுடன் வாதாடும்
கூட்டமெலாம் தவிர்க்கணும்
பெட்டியிலே ரத்தினம்போல்
நாவிலின்பம் மின்னனும்
கையளவுக்கு மேலாகும்
ஆசையெலாம் மறுக்கணும்
மெய்யளவு தான்சுவாசம்
என்பதையேன் மறக்கணும்
எவர்பதவி சொத்துபணம்
ஏய்ப்பதும் ஓர்பாவமே
அவர்நலனை காக்கவெனில்
சேர்ப்பதும் ஏராளமே
பொய்பேச தோன்றிவிடின்
பூதமுன்னை விழுங்கிடும்
செய்யென்று தவறுகளால்
சீக்கிரத்தில் நரகமே
வயிறார பசிநீக்கும்
பணியும் ஒருபூசையே
அயராத அறமுழைப்பு
அதுவும் ஒருயாகமே
தினமாறும் பொழுதுனது
முதிர்ச்சியுற அறிவிலே
இளைப்பாறு களைப்பாறு முதுமையிலும் இனிமையே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்