ஒன்றுமே எனக்கு தெரியாது
உள்மனம் உனையன்றி ஏதுமறியாது.
என்றுமே எதிலும் நிறைவடையாது
குன்று மீதடைந்தேன் சுவாமிநாதா ()
அன்றுமே பழனியில் ஆண்டியாய் நின்றாலும்
அசுரரை வதம் செய்தாய்
செந்தூர் வடிவேலா
நன்றுமே நிகழ்ந்திடும்
பன்னிரு விழிகளிலே
என்னையும் காணாயா
உமைமகள் சிவக்குமரா ()
கலியுகப் பழியென்கோ
கர்மபெரு வினையென்கோ
பிறவி யெடுத்துவிட்டு
பிழையாகப் பிழைப்பதுவோ
கருவியாய் எனைஇயக்கு
கற்றதெலா முன்கணக்கு
அறிவாய் ஆறுமுகா
ஆண்டருள் தமிழுனக்கு ()
சமர்ப்பணம் சத்தியமணி

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்