Friday, 5 January 2024

ஆறுதலைத் தந்தால்

ஆறுதலைத் தந்தால் போதுமா...கால
மாறுதலுக் கேற்ப எனைக் காக்க வேண்டாமா  ()

தேறுதல் அறியாமல் தினமும் தேர்வுகளா  
தீர்வுகள் தரும் வேலும் மயிலுடன் துணைக்கு வா   ()

ஏறுதல் மயில்மீதும் இறங்குதல்  அறிவாயே  
பாடுதல் என் பணியாய் பாராள விடுவாயே 
வாடுதல் இல்லாமல் வாழ்ந்திட அருள்வாயே 
நாடுதல்  உன்னடியே திரு
செந்தூர் பெருமாளே  ()

சமர்ப்பணம் சத்தியமணி
07-11-23

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்