Friday, 5 January 2024

சரவணபவனெனும்

சரவணபவனெனும் போது
கரைந்திடும் மனது கவலைகள் மறைந்து ()

அலைகளில் செந்தூர் 
அருவியில் திருக்குன்றம் 
அமைதியில் பழனி 
அருளினில் சுவாமியென ()

மருந்திட மருதம்
அருந்திட தணிகை
கனிந்திட சோலையென 
நினைந்திட வேலவனை ()

அறுபடை அமர்ந்து
அசுரரை அழித்து 
பக்தரைக் காக்க
வேலும் மயிலுடனே ()
சமர்ப்பணம் சத்தியமணி
05-11-23

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்