Friday, 5 January 2024

தருணமிது எனைக் காக்க

தருணமிது எனைக் காக்க வேண்டும் 
கருணையுடன் அம்மா அகிலாண்டேஸ்வரி ()

மரணமில்லா பிறவி தருபவளே உன்
மடியினில் அமரவைத்து யாழெனை மீட்டிடவே  ()

நாக்கினில் வாக்கெனவே வலம்வர கலைமகளே தொலை
நோக்கினில் தோளேற்றி கிளியெனைக் கொஞ்சிடவே ()
தனமுடன் தர்ம மனதுடன் வாழ்வினிக்க 
தினமுனைத் துதிபாட சீக்கிரம் வரம் தரவே ()
சமர்ப்பித்த சத்தியமணி 08-11

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்