Friday, 5 January 2024

கஷ்டமெல்லாம் போக்கும்

கஷ்டமெல்லாம் போக்கும் சஷ்டியில் நோன்பிருப்போம் 
நஷ்டமெல்லாம் நீங்கும்பால
முருகனை துதிசெய்வோம்()

இஷ்டமெல்லாம் கேட்டே இன்னல்கள் தீர்ப்பான் 
சுயமாய் மயிலமர்ந்து 
சுகமெல்லாம் கொடுப்பான்()

சரவணபவ னென்றே 
சரணம் அடைந்து விடு 
வருகின்ற வாழ்வதற்கு 
வரமளிக்க படைவீடு 
வேலுடன் மயிலிருக்க
அச்சமிலை நமக்கு 
வாளுடன் பகையழிக்க
பாலசுப்பிரமணி துணைக்கு
சமர்ப்பணம் சத்தியமணி

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்