வீடொன்று தரவேண்டும் வேலவா உன்னைக்
குளிப்பாட்டி அழகூட்டி துதிபாடவே ()
படை வீடு ஆறும் பெற்றவன் நீயல்லவா உன்
கடை விழியும் மொழி வழியும் சுகவீடும் தருமல்லவா ()
இருக்கின்ற தனத்திற்கு ஏற்றாற்போல் நல்லிடத்தில்
ஏய்ப்போரும் வேலதனால்
தயையோடு நல்லறத்தில்
வில்லங்கம் இல்லாது
நீவாங்கி தரவேண்டும்
இல்லத்தில் உள்ளத்தில் நிறைவோடு நீவேண்டும் ()
சமர்ப்பணம் சத்தியமணி 091123

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்