Friday, 5 January 2024

மடியினில் எடுத்தெனை

மடியினில் எடுத்தெனை யாழென மீட்டு
தமிழதன் தவமெனப் பேற்றினைக் கூட்டு ()

படித்திடும் பார்வையும் 
பயின்றிடும் வார்த்தையும்
நிலைத்திடும்படி யினி 
செய்வதுன் பொறுப்பு 
கிடைத்திடும் திறமையும்
நிலைத்திடும் பெறுமையும் 
அருளிடும் அமைதியும்
வாணிநின் சிறப்பு ()

வழங்கிடும் வாய்மையும்
வெள்ளுடைத் தூய்மையும்
செல்வமும் சொல்வளம் 
வந்திடும் ஏற்று 
இன்னுயிர் உன்னிடம்
உன்துதி என்னிடம்
கண்கடை காட்டியே
நாவினில் ஊற்று ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்