காக்க நீயிருக்க கவலைகள் எனக்கெதற்கு
பார்க்க பார்க்க எனை பரவசமே உனக்கு ()
நீக்கமற நெஞ்சிலே அமர்ந்தவனே முருகா நீ
நினைத்தபடி நல்லவை நிகழ்ந்திட அருள் புரிவாய் ()
சுயமாய் வந்தருளி வளரும் ராஜபாலா
சுயமாலயம் அலங்கரிக்கும் உமைக்குமரா
வேலுடன் மயிலோடு தரிசனம் தயையுனக்கு
தேவைகள் அறிந்துடனே தருவாய் வளமெனக்கு ()
சமர்ப்பணம் ....சத்தியமணி

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்