ஒளி வண்ணம் கண்டு
களிப்பென்ற ஒன்று
வழி காட்டும் என்று
வாழ்த்துவோம் இன்று
புத்தாடை அணிந்து
உற்சாகம் அடைந்து
அன்போடு இணைந்து
வாழ்த்துவோம் இன்று
மாசில்லா சுவாசம்
துகளாக துவேசம்
கங்கையே பிரவேசம்
நேசத்தின் சந்தேசம்
புகையாத வளியும்
பகையிலா விழியும்
நட்ப்போடு மொழியும்
நிறைவோடு விடியும் தீபாவளி
..சத்தியமணி 11-11-23

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்