Saturday, 28 October 2017

அறுபடை ஆண்டோன் துதி



ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா
நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்