ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா
நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே


No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்