Saturday, 28 October 2017

மகாத்மா காந்தி அஞ்சலி





காந்தியின் இதழ்கள் விரிந்திடும் பணத்தாள்க‌ளில் தாம்பதிந்ததால்
காந்தியின் இமைகள் கலங்கிடும் கள்ளநோட்டுகளிலும் பதிந்ததால்
காந்தியின் இதயம் களித்திடும் புதுமைமங்கையர் சிறப்பினால்
காந்தியின் இதயம் அழுதிடும் அவநிலையில்பெண் நிகழ்வினால்
காந்தியின் உள்ளம் நிறைந்திடும் இந்தியஅறிவின் பெருமையால்
காந்தியின் உள்ளம் உடைந்திடும் ஊழல்வஞ்சனைப் பெருக்கினால்
காந்தியின் கால்களும் குதித்திடும் அரிசனங்களின் வளர்ச்சியால்
காந்தியின் கால்களும் வலித்திடும் வரிசரங்களின் சுமையினால்
காந்தியின் கரங்களும் உயர்ந்திடும் உலகில்பாரதப் புகழினால்
காந்தியின் கண்களும் அழுதிடும் அரசியல்தரத்தின் மலிவினால்
காந்தியின் ஆத்மா வியந்திடும் இளையபாரத துடிப்பினால்
காந்தியின் சாந்தி விசும்பிடும் தருமநெறிகளின் தளர்வினால்
ஹே ராம் ! ஹே ராம் !

பரமாத்மா    இருப்பாரோ இல்லையோ 
மகாத்மாவை   கண்டோம் பாரதமே

வாழிய  !!  வாழிய !!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்