கடமையின் பாதை
(சத்தியமணி)
கடமை என் பாதை
கடமையின் பாதை
கடமை உன்பாதை
கடமையுன் பாதை
கண்திறந்து பார்
மனந்திறந்து எழுதிகொள்
களைப்பிலா பயணத்தில்
கற்முற்கள் கால்துளைத்து
புண்ணாக்கி விட்டபோதும்
புறையோடி சீழ்இரத்தம்
தடையாக்க வந்தபோதும்
தள்ளாட்டம் இன்றியதில்
குறிக்கோள்கள் வைத்து
கூரம்பாய் நீதொடரு
ஏளனம் செய்வார்கள்
எள்ளிநகை யாட்டமுடன்
கைகொட்டி சிரிப்பார்கள்
கழுதையென இகழ்தலுமே
மண்மீது பிறந்தவர்க்கு
மண்ணாகும் வரையில்நீ
உண்மைக்கு தோள்கொடு
உலகுக்கு தர்மமொடு
பெற்ற தாயார்க்கு
பிள்ளைநீ காப்பாற்று
கற்ற மதியெலாம்
அடகாக்கு அவள்காலில்
பதவிபணம்புகழில்
பகட்டில் நீ வாழ்ந்தாலும்
உற்ற தாய்விட்டு
ஓரங்கட்டி விட்டாயா?
குற்றம் உனக்குடைய
கோடி பிறவிகளில்
முட்டையாய் மண்புழுவாய்
மீண்டும் வதைபடுவாய்
வற்றிய குளத்திலே
துயருரறும் மீனாவாய்
சுற்றதார் முன்னால்
பெற்றதாய் மிதித்து
வீதியில் இட்டாலோ
விதியென சுட்டாலோ
குற்றம் உனைக்கொல்லும்
குறையாது குறையாகும்
மற்றவை நான்சொல்ல
மடையருக்கு புரியாது
கொற்றவர்க்கும் இதுவேதான்
கொடியவர்க்கும் இதுவேதான்
ஈரைந்து திங்களிலே
உனைசுமந்த உத்தமியை
ஆறைந்து வயதினிலே
அனாதை ஆக்கியதால்
உடமைகள் என்று சொல்லி
உன்னோடு பிணிவிழும்
உரிமைகள் என்று கூறி
உன்னோடு பேய்வாழும்
தாயும் தாய்மண்ணும்
வேறில்லை வேறில்லை
ஓயும் வரைக்கும் அவை
உனக்கான பெயரழைக்க
நாயும் நரியினமும்
தம்தாயை விட்டதில்லை
ஓயும் வரையில்மனப்
பாசம் திரிந்ததில்லை
சேயும் நலங்காண
விரும்பும் தாய்நாட்டை
ஏய்த்து பிழைப்போரின்
வம்சம் வளர்வதில்லை
ஏமாற்றி ஆள்வோரின்
பரம்பரை துளிர்வதில்லை
இறைவனுக் குரிதான நிலம்பொருள்அணிகளதை
தெரியாமல் எடுத்தாலும்
பரிசாக்கி கொண்டாலும்
களவாடி ஆகிவிட்டாய்
களங்கம் ஆனதுதான்
பொதுசொத்து அபகரித்த
பாவங்கள் எரித்துவிடும்
தீவினைகள் தொடர்பிறவி
யாவிலும் துயருந்தரும்
மடியில் தீவளர்த்தால்
மரிவது யார்கடனோ..

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்