Saturday, 10 September 2022

பெற்றோராவது சும்மாவா

 பெற்றோராவது சும்மாவா

(சத்தியமணி 08 09 22)


பெற்றோராவது சும்மாவா

பிள்ளைகளுக்கு தெரியாது

கற்றோராகி உயர்ந்த பின்னாலும் அனுபவமின்றி புரியாது  


கருவை தாங்கிடும் அன்னைகளின்

கருப்பை இயக்கங்கள் மாறுபடும்

பிடித்த உணவுகள் ருசித்ததன்பின் விரைவாய் வாந்தியில் வெளியேற்றும்

சுமையைத் தாங்கிடும் போதினிலே 

மூச்சுமிறைக்கும் வலியிருக்கும்

தூங்கவும் அமரவும் முடியாமல் தாய்மை அவதியும் கொஞ்சமல்ல ()


ஈன்றதன் பின்னால் சிலவருடம்

இரவு தூக்கமிலை நிலையே

நீண்ட அழுகையில் குழந்தையதன்

காரணம றியவும்

கலையிலையே

கொஞ்சிட எடுத்து அணைக்கையிலே மூத்திரமடித்து தான் ரசிக்கும்

கெஞ்சிடும் மழலையை கேட்டாலோ

சிரமங்களெல்லாம் சிரிக்க வைக்கும் ( )  


தந்தையின் தோளினில் யானை என்றும் 

தாயின் தோளினில் மூட்டையென்றும் 

அடுக்கி வைத்த பொருட்களையும்

அநாசியமாய் உடைந்திருக்கும் 

சுவரில் கரியில் கிறுக்கெல்லாம்

ஓவியமென்று ரசித்திருப்பர்

செய்யும் குறும்புகள் நினைவு வைத்து

பெருமைக் கூறிட  புகழ்ந்திடுவர்  ( ) 


குழந்தை வலிகளைப் பொறுக்காமல் 

தெய்வம் படுகிற அவதிகளும்

சேர்த்து வைத்தன கரைந்தாலும் காக்க வைத்திடும் கருணைகளும்

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் 

கடனை அடைக்க முடியாது

அவர்களின் முதுமை அவதியுற்றால்

எவர்க்கும் முக்தி கிடையாது.    ()


வலியில் துடிக்கும் கால்களையும்

எண்ணைத்தடவிட ஒத்தடமும்

விழியும் செவியும் மங்குகையில்

கையுடன் சேரும் அரவணைப்பும்

எத்தனை டாலர் ஈடேற்றும்

எத்தனை  அன்புடன் உரையாற்றும்

அத்தனை பொழுதை தொலைத்துவிட்டார்

வாழ்வின் பயனை இழந்து விட்டார்   ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்