Tuesday, 13 September 2022

யார் பகைவன்

கீதம்  


நீயே உனக்கு பகைவன் ஆனபின்

வாழ்வும்  உனக்கு  பெரும் சுமையே

நீயே உனக்கு துரோகி யானபின்

உறவும் உனக்கு கொடும் பகையே

தாய்க்கு  பார மாகி விட்டாய்

மண்ணுக்கு சுமையாய்  மாறி விட்டாய்     ( )

காட்சி பலமாற்றி கட்சி பலமாறி 

ஆட்சி செய்வதொரு  பிழைப்போ

 பொய்

சாட்சி பலகூறி  நீதிதனை மாற்றி 

விழுங்கி கொள்ளு வதும் உழைப்போ

வாக்கு பலகூறி ஏய்க்கும் திறன்னாற்றி

வறியர் வாழ்வை கொல்லல் அறிவோ

நோக்க மறைத்தபடி ஆக்க பணிகளென

அழிக்க நினைப்  பதுவும் அறனோ  (  )


பாவம் பலசெய்த பின்னும் பலகோடி

நியாய மென்ற தனை சொல்வாய்

தாவும் மனதினில் பேயும் குடிபெயர

ஈரக் கருணை  களைத் தவிர்த்தாய்

சாவும் மனிதர்களின் துக்க துயரங்களை

காட்டிநி வாரண ங்கள் சேர்ப்பாய்

சூதும் வாதும் பலதீயப் பழக்கங்களை

பள்ளி பிராயத் தினில் பயிற்பாய்  ( )

குற்றம் பலபெருக குற்றவாளி களின்

கொற்ற மெனக் கூறி புகழ்வாய்

சுற்றம் புடைசூழ சுற்றதார் களுடன்

சுற்று லாக்கள் பல புரிவாய்

கற்றவர் களின் கருத்தை வெறுத்தபடி

முற்று   மெதிர்  திட்டம் வரைவாய்

சற்றும் நினையாது நாக்கில் வந்தபடி

பேசிபொய்யில் மொழி பெயர்ப்பாய்

ஏற்ற  தாழ்வுகள் இல்லை யெனச்சொல்லி

மேடை யெங்கும் பிரித்து உரைப்பாய்

ஆற்ற ஆக்கமெனும் வழியை விட்டுபிற

மார்க்க எதிரிகளிடம்  சரண டைந்தாய்

  ( )









2 comments:

  1. இன்றைய தலைமுறைக்கு பரிச்சயம் இல்லாததாக இருப்பினும், தங்கள் கவிதையின் பா வகைகளையும் தலைப்பில் குறிப்பிட்டால் நல்லது!

    ReplyDelete

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்