முன்னோர் நினைத்து எள்நீர் கொடுத்து
தன்கடன் தீர்த்து கொள்...1
முன்னோரை துதித்த சிரத்தையில் எள்நீரே
பின்னோரை வாழ்த்தி வைக்கும்..2
பிறவி பெருங்கடன் பெற்றோரை காத்தல்
மற்றவை மடிக்கு சுமை...3
பூமிக்கு பாரமாய் தலைக்கு சுமையாய்
இருப்பதை குறைக்க முனை...4
பிறவிகள் யாவிலுமே தொடரும் பிழைகளையும்
கரைக்கும் எள்நீர் அறி....5
தொடரும் பாவமெனும்
மிச்சங்கள் அழித்தால்
தெரியும் முக்தி வழி..6
பெற்றோரை நினைத்து பெருமாளை அழைத்து
தொற்றிய பாவம் தொலை...7
அட்சதை ஏந்தியே
வருகின்ற மகாளயம்
பட்சத்தில் திருப்தி கொடு.....8
தலைமுறை மூன்றும்
நமைக்காண வரும்போது
நினைவாலே போற்றி படி...9
வாழ்ந்த நினைவுகள்
வாழ்த்த வரும்போது
வாழ்வின் பயனைப் பெறு..........10

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்