Sunday, 11 September 2022

தமிழுக்கும் பாரதிநீ 2019

தேரதிர வந்தால் 

தெய்வமே வலம்வரும்

காரதிர வந்தால்

கனமழை நிரந்தரம்

பாரதிர வந்ததால்

பார்ப்பனன் வேள்விதீ

வீரதிர விடுத்ததடா

தமிழுக்கும் பாரதிநீ


மொழிகளை மதித்தாய் 

காழ்ப்புடன் வெறுக்கவில்லை 

நதிகளை இணைத்தாய்

அரசியல் அடைக்கவில்லை 

மாதரைப் புகழ்ந்தாய்

காமத்தில் இகழவில்லை

மதங்களைப் போற்றினாய்

 மக்களை பிரிக்கவில்லை


சாதிகள் இல்லையென்றாய்

சட்டத்தில் பிரிக்கவில்லை

மதங்கள் நன்றென்றாய்

கட்சிகள்  வளர்க்கவில்லை

கோயில்கள் பள்ளியென்றாய்

வணிகமே  நடத்தவில்லை

மங்கையர்  சுதந்திரமே

குத்தாட்டம் சொல்லவில்லை


சுதந்திரம் பயிற்றுவைத்தாய்

சூராடும்  படியில்லை

தேசத்தை வளரச்சொன்னாய்

தேய்த்திட சொல்லவில்லை

அச்சத்தை அழிக்கசொன்னாய்

அதில்வில்லத் தனமில்லை

உயர்வுக்கு உழைக்கசொன்னாய்

ஊழலைப்  பற்றியில்லை


ஏற்றம் பெற சொன்னாய்

ஏமாற்றும் செயலுக்கில்லை

வசதிகள் ஈட்டசொன்னாய்

வாரிசுக்கு சிபாரிசில்லை

கப்பல் விடசொன்னாய்

கையூடல் கலக்குதப்பா

தெய்வம் துணையென்றாய்

தெருகோயில் சிதையுதுபார்


மருத்துவ காக்கவென்றாய்

மலைவிழுங்கி பாம்புகளே

திருந்துவோர் நிலையெலாம்

திருட்டில் நிறையுதப்பா

அறமெலாம் வளரசொன்னீர்

அடிதடி பெருக்கெடுக்க

கன்னியர் கற்பினுக்கோ

நிகழ்வதை  என்னசொல்ல


ஒன்று பட்டாலுண்டென்றாய்

ஓநாய்கள் அணிவகுக்கும்

நரிகளும் பணம்வாங்கி

பிரிவினை தனைவிதைக்கும்

ஓட்டுக்கு  ஓசிகளும்

வாக்குரிமை பேசிகளும்

நாட்டுக்கு மக்களுக்கு

வேட்டுவைக்கும் வேடிக்கையே


வளர்ச்சி ஒருபுறமும்

கிளர்ச்சி ஒருபுறமும்

தெளிவு ஒருபுறமும்

குழப்ப ஒருபுறமும்

உண்மை ஒருபுறமும்

பொய்மை மறுபுறமும்

மெச்சல்  ஒருபுறமும்

வஞ்சம் மறுபுறமும்

சுதந்திரத்தை  நஞ்சாக்கும்

சுயநல துரோகிகளை

அவர்தம்மை பிளந்து

சிம்மமாய் வருவாயே

தமிழுக்கும் பாரதிநீ

தரணிக்கும்  பாரதமே !!!









No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்