Monday, 2 September 2013

பாடுங்கள் தமிழாள் வாழ!

வாருங்கள் பலகோடி சேர    மகளிர்    நிலமேக!

பாடுங்கள்  தமிழாள்  வாழ!   நிலத்து   நலமாக !

பருவங்கள் மாறும் தமிழகராதியில் பெண்ணின் வாழ்க்கை

புருவங்கள் ஏறும்  அறிவீர்!அவள்  புன்னகை சேர்க்கை ()



பேதைமெய்     சிறுமிகுறுமி  பாலை வடிவெடுத்தாள் (5-7)

பெதும்பையே  ஆகத்தருவி  தும்பை  நுனிபிடித்தாள் (8-11)

மங்கையாய்     பருவமெய்தி  பெண்மை பெயர்ந்தாள் (11-13)

மடந்தையாள்  மாந்தளிராகி  மலராய்  சிரித்தாள் (14-19) ()



அன்னமன் னந்நடை அரிவையாகி காதல் கற்றாள் (20-25)

தெரிவை எம்மைத் தெரிவாயென இல்லறம் கண்டாள் (26-31)

பேரிளம்பெண்  அன்னை யென்றே பாசம் பொழிந்தாள் (32-40)

நுங்கையாகி  நற்றமிழ் எழுதிட கற்று கொடுத்தாள் ()

 நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணில் சிறந்தாள் - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்  சக்தி மகிமை!
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை
புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

நங்கையாகி உறவுகள் ஏற்று  பெண்ணின் பெருமை - மாலன்
தங்கையிவளே ! மகளாய்  பிறந்தாள்சக்தி மகிமை !
முதுமையென முடிவெண்மை யாகினும் என்றுமிளமை

புதுமையாய்   இதைக்கவியில் வடிக்க தந்தேனுவமை ()

அன்பாலே திருத்தப் பாருங்கள்

அடி நாக்கிலே நஞ்சு கள்வைத்து,
 நுனி நாக்கிலே அமிர்தமாக்குவார்
பேசும் போதிலே சிரிப்பைக்காட்டி
கூசும்படியதை  வஞ்சமாகுவார்
யாரைப் பேதை மனம் நம்பும்
நீர்நிலை யில்கண் குழம்பும் ()

கொட்டி திட்டிவிடும் எதிரிநண்பரே
சிரித்து கெடுக்கும் நண்பர் ஏதிரியே
போற்றி போற்றியென புகழைப்பாடி
தூற்றினார் திரைமறைவில் கோடி
வீற்றிருப்பார் நம் பக்கம்
தான்களிப்பார் நம் துக்கம்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்
அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

கண்கள் காண்பதுவும் பொய்யானால்
காதில் கேட்பதுவும் பொய்யானால்
சிரித்து வாழ்தத்துவதும் பொய்யானால்
துதித்து கலப்பதுவும் பொய்யானால்
வாழ்க்கைத் தான் தடுமாறும்
வழக்கில்  நாளும் ஏமாறும்
அடையாளம் கண்டுகொள்ளுங்கள்

அன்பாலே திருத்தப் பாருங்கள் ()

கேளாயோ பாரதமே !

கண்ணீரில்   அவர்கள்   கைகட்டி     இவர்கள்
தண்ணீரில்    சட்டம்      டைகட்டி      திட்டும்
புதுமைப்      பெண்டிர்     புகழ்சொன்ன பாரதி
புலம்பி         அழுவதை  எத்த்மிழிர் கேட்டனரோ
பசும்பொன்  புன்னகை    ததும்பிடும்    காந்தி
விசும்பல்     ஒலிகூட     உம்காதில்  சேராதோ
இப்போது     இந்நாளில்  இனிமேலும்  குறைவது
பாதுகாப்பு   பண்பாடு       குலநீதி       நற்குண்மே
எப்போது      எந்நாளில்   இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே  கேடாகும்

கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே    

அப்பா (தந்தையர் தினத்தில்)

நிறுத்தி சொன்னால் பாசம் தெரியும்
மெதுவாய் சொன்னால் கடினம் விலகும்
கத்தி சொன்னால் தனிமைத் திணறும்
கதறி சொன்னால் விலகல் புரியும்

நீட்டி சொன்னால் நிறைவென அர்த்தம்
நினைத்து சொன்னால் ஞாபகத் தருணம்
அழகாய்ச் சொன்னால் அன்பளிப்பாலோ ?
அடுக்காய்ச் சொன்னால் ஆச்சரியத்தாலோ !

சொல்லி பாருங்கள் வாயினில் - மனத்தில்
பொருளைக் காணலாம் தந்தையர் தினத்தில்
தந்தையர் ஆனதுஎல்லாம்  - புவியில்
முந்தைநல் வினைகளின் மூலப்பயனே!
!

எங்கே போகிறது காலம்



சுதந்திரதின நல் வாழ்த்துகள்
வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

எங்கே போகிறது காலம்
இங்கே யேனலங் கோலம்
மேலே எழுகிறது நாசம்
கீழே  விழுகிறது தேசம்…...()

குழிகள்பறித்து   முடமானார்
விழிகளிருந்தும் குருடானார்
செவிகளிருந்தும் செவிடானார்
அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ..()

கற்ற    கல்வி  தரும் பட்டம்
உற்ற  வேலை யின்றி கட்டம்
வரிகள் போக வருமானம்-அவ
மானம் இங்கு வெகுமானம் ……..()

மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு
மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு
சாதி பெயரில் வாக்கு சீட்டு
மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……..()

நீதிநியாயம் வெறும் பேச்சு
பாதிதர்மம் எங்கு போச்சு
வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……..()

அடி வானம் சிவந்தது

அடி வானம் சிவந்தது
அது ஏன்?
இத்தனை அடிகளா கொடுப்பது
அடிகளில் கண்ணிடச் சிவப்பது
இருந்தும் எப்படி பொறுப்பது ?
இதற்கு ஒருதீர்வை எடுப்பது ?
மருந்திடு பாட்டி வைத்தியத்தால்
மூலிகை தென்றல் எழும்பச்சொல்
சுரந்திடும் அமுத மேகங்களால்
சுகமாய் ஒத்தடம் தந்திடச்சொல்
நாளை விடுமுறை எடுத்துவிட்டால்...
அடுத்தக் கவிதை எப்படி ?
வண்ண தனுசுகள் வந்துவிட்டால்


தொடுக்கும் அம்புகள் இப்படி!

பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)



 (published in vallamail.com)


மதுரைநாயகி மீனாட்சி காப்பிட்டு கொண்டே கண்ணனிடம் இயம்புகிறாள்

ஒவ்வொரு அணுவிலும் இருப்பவனே
ஒவ்வொரு நிகழ்விலும் தெரிபவனே
காரணக் காரணம் ஆனவனே
கருணை கடலில் துயில்பவனே
மலையைக் குடையாய் பிடித்தவனே
மதுவை  விழியில் விடுப்பவனே
அன்பைச் சிரிப்பாய் அளிப்பவனே
அழகிய! அழகா! என் அண்ணா!
பாஞ்சாலிகளின் கதைதினமும்
பாரதமண்ணில் நடக்குதடா
பாரதிருப்பது முறையோ-உன்
பாஞ்ச சைன்யம் முடங்கியதோ
நீதிநியாயம் தர்மமெலாம்
மீதியின்றி வறள்வதன்முன்
அவதாரம் உடன் எடுப்பாயே
அருளால்  இப்புவிக் காப்பாயே!

காப்பிட்டத் தங்கைக்கு கண்ணன் கூற்று

ஒவ்வொரு உயிரையும்  பெற்றவளே
உண்டிடப்   பால்தரும்      உற்றவளே
சூலமும்      வாள்படைத் தாங்கிடவே
காலமும்    சுழற்சியும்     ஏற்பவளே
என்னிடம் அன்பைப் பொழிபவளே
எங்களின் சக்தியின்    இமையவளே
தாய்மையின் வடிவே! உமையவளே!
சேய்குலம் காப்பது   நீயல்லவோ?
செல்வமும் வளமும் காத்திடுவாய்
சிறப்புகள்   சேமங்கள் கூட்டிடுவாய்
அழைத்ததும் சிங்கத்தில் விரைபவளே
அருள்வதில் உன்னினும் உயர்வுளதோ?

சரணம்
அன்னையும் அண்ணனும் காப்பதனால்
அகிலமும்     அன்பால்  சுழலுதடா
துன்பமும் துயரமும் போகுமடா

உண்மையும் உறவும் நிலைக்குமடா