போதகம் என்றதும் குதித்தோடி வந்தது
மோதகம் பெற்றதும் வரம்கோடி தந்தது
பாதகம் தடையாவும் பொடிபொடி தகர்த்தது
சாதகம் தருமாக்கம் துடியடி கொடுத்தது
கவிமுகம் கயமுனி பிரமமாய் சேர்ந்தது
மறைமுகம் துயர்வினை மாயமாய் தீர்ந்தது
அறிமுகம் தருமுகம் அருள்முகம் பார்த்தது
கரிமுகம் திருமுகம் ஒருமுகம் ஏற்றது
கம்மெனச் சொன்னாலே கவலைகள் தீருமே
கம்மெனச் சொன்னாலே
கழுபிணி ஆறுமே
கம்மெனச் சொன்னாலே
கல்வியில் ஞானமே
கம்மெனச் சொன்னாலே கணநாதம் கூடுமே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்