கிருஷ்ணாஷ்டமீ
கீதம். கிருஷ்ணா
ராகம். நீலாம்பரி
(சத்தியமணி)
நித்திரையைத் தரும் நீலாம்பரியோ
கிருஷ்ணா
நிம்மதியைத் தரும் பீதாம்பரியோ
கிருஷ்ணா
முத்துகள் முத்தமிடும் மோகனனே கிருஷ்ணா
பித்தமெலாம் சேர்க்கும் கோவிந்தனே கிருஷ்ணா
சத்தமில்லாமல் வரும் சாதுர்யனே
மன
சஞ்சலம் போக்கிடும் தயாபரனே
நித்தமும் விளையாடும் ஸ்ரீதரனே
என்
சித்தமெலாம் உனக்கே ஸ்ரீரங்கனே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்