ஆடி கிருத்திகை 2025
உனதருள் வேலே
(சத்தியமணி)
இரு விழியும் போதுமோ உன் எழில் காண
ஒரு நாவும் போதுமோ உன் புகழ் பாட
சிறு மதியும் போதுமோ உன் மகிமைக் கூற
திரு நொடியும் போதுமோ உன் அருகில் வாழ.
முருகா முருகா.
முருகா முருகா. ()
சரவணபவ னென்னும் மந்திரம் கொடுத்தாய்
சிரமதில் செந்தமிழ் இயந்திரம் பொறித்தாய்
நரமிதில் கலியுக தந்திரம்
மறுத்தாய்
தரமதில் உயர்தெனக் குருவெனக் கிடைத்தாய்
மரமதில் கனிவளம் கவிதைகள் சுவைத்தாய்
வரமிது மகிழ்ந்திடு உளமதில் நிறைந்தாய்
கிடைப்பதும் கொடுப்பதும் உனதருள் வேலே
காப்பதும் கழிப்பதும் உனதருள் வேலே
பார்ப்பதும் சேர்ப்பதும் உனதருள் வேலே
படிப்பதும் கேட்பதும் உனதருள் வேலே
நினைப்பதும் நடப்பதும் உனதருள் வேலே
இருப்பதும் சிறப்பதும் உனதருள் வேலே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்