Thursday, 1 December 2022

சிக்கினேன்

 சிக்கினேன்       கீர்த்தனை 

ராகம்  பைரவி

(சத்தியமணி)



சிக்கினேன் திருவடியில் 

சிக்கென பிடித்து கொண்டேன் 

மக்கென விலக்காது அருள்தரவேணும் சங்கரி ( ) 


திக்கெலாம் ஒளியாய் நிறைந்து நிற்பவளே 

பக்கமே வந்தெனை பாடவைப்பவளே   ( ) 



முக்காலமும் அறிந்த பரமனின் வலபுறமே 

இக்காலம் இனிதென விரைந்திட வரம்தரவே

பக்தனாய் பார்க்காமல் பிள்ளையாய் மீனாட்சி 

எக்காலமும் வெற்றியே அருள்வதே உன்காட்சி ( )




No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்