Wednesday, 14 August 2013

அன்பைத் தந்து இறையாகு

கொதித்து நீயும் முகிலாகு
குளிர்ந்து  நீயும் மழையாகு
விதையில் இருந்து மரமாகு
கனிகள் உதிர்ந்து விதையாகு

கருவம்    ஒழித்து மொட்டாகு
உருவம்    உரித்து மலராகு
இரவல்    கேட்டு இலையாகு
இருக்கும் வரையில்  விருந்தாகு

குழப்பம்  விலக்கும் குணமாகு
கலக்கம்  கழிக்கும்   கணையாகு
விளக்கம் வழங்கும் அறிவாகு
இலக்கம்  இல்லா    சுழியாகு

புரியும் வரையில் புதிராகு
புரியா   தவர்க்கும் புலனாகு
தெரியும் வரையில் தெளிவாகு
தெரியா   தவர்க்கும் ஒளியாகு

அடக்கம் என்னும் அழகாகு
அசத்தும் விந்தை  கவியாகு
அட்சயம் பகிர்ந்து அன்பாகு
அன்பைத் தந்து இறையாகு

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்