Thursday, 25 April 2013

சித்திரை நிலவே சித்திரை நிலவே


சித்திரை நிலவே சித்திரை நிலவே
சிரித்தே வானில் தவழ்ந்தே நீயும்
மயக்கும் நித்தில மணிகுண்டாய்நீ
இயக்கினாய் எங்கள் இரவைப்பகலாய்!

வறுமை  வாழும் குடிசையில்பிள்ளை
வயிறு  நிறையக் கஞ்சிக் குடித்து
உன்னைப் பார்த்தே அமுதம் என்றே
உவகை  யுடனே மாமா என்பார்!

செல்வச் செழிப்பின் சிறார் ஆங்கே
குளுகுளு அறையில் கணினிஊடோ
முழங்கு தொல்லைக்காட்சி யுடனோ
முடங்கி கிடப்பார்! திரைப்படம் களிப்பார்!!

விண்கலம் ஏறி வந்திட ஆங்கே
கத்தை நோட்டுகள் எரிக்கப் பிழைப்பார்
கண்கள் இருந்தினும் கறுந்திரைப்போட்டு
காணாதிருப்பார் உன்றன் எழிலை!

எத்துனைத் துன்பம் வந்தபோதிலும்
உன் துணைஒன்றே ஆறுதல் மருந்து
மேகமில்லா நீல்வெளிதன்னில்
உன்றன் தரிசனம் என்றன்  விருந்து!!

இதுவே அது அதுவே இது


இதுவே அது அதுவே இது
அத்வைதம் உணர்பவனுக்கு
அர்த்தம் இல்லைஆசை இல்லை
பெயர் இல்லை பேதம் இல்லை
அகம் இல்லை அகந்தை இல்லை
அவதி இல்லை அர்ச்சனை இல்லை
உருவம் இல்லை கருவம் இல்லை
இறப்பு இல்லை பிறப்பு இல்லை
மெய்யும் இல்லை பொய்யும் இல்லை
இனிப்பும் இல்லை ப்பும் இல்லை
னிமை இல்லை விப்பும் இல்லை
இரண்டும் ஒன்றே இருந்தும் ஒன்றே
பிரிந்தும் ஒன்றே கலந்தும் ஒன்றே
தெரிந்தும் ஒன்றே மறந்தும் ஒன்றே
அறிந்தும் ஒன்றே மறுத்தும் ஒன்றே
எல்லாம் ஏகம் என்றன் சாரம்
எனது என்று எதுவும் இல்லை
கொடுத்ததும் அவனே
கொடுப்பதும் அவனே
கொள்வதும் அவனே இவை
சொல்வதும் அவனே    
இதுவே அது அதுவே இது

2012 வாழ்த்து மலர்


2012 வாழ்த்து மலர்
பொழுதும் புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள் மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று வளர்ந்தது பன்னிர‌ண்டு பிறந்தது
மெதுவாய் இளமை முதுமைக்குள் ()
அன்னை இல்லாது பிள்ளை இல்லை
அமுதம் இல்லாது குமுதம் இல்லை
தாளம் இல்லாது இசையும் இல்லை
தொடர்களின்  தொடரிது
உறவு  இல்லாது  மயக்கம் இல்லை
உரிமை இல்லாதுஇயக்கம் இல்லை
நீங்கள் இல்லாது நாங்கள் இல்லை
விதையின்  வாழ்த்திது
பொழுதும் புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள் மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று முதிர்ந்தது  பன்னிர‌ண்டு கனிந்தது
மெதுவாய் முதிர்ந்தது இளமைக்குள்

ஆடல் இல்லாது பாடல் இல்லை
ஊடல் இல்லாது கூடல் இல்லை
அனுபவம் சொன்னது
தானம் இல்லாது தர்மம் இல்லை
மோனம் இல்லாது மோட்சம் இல்லை
யாரும் இல்லாது யாரும் இல்லை
உண்மையின் உருவிது
பொழுதும் புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள் மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று முதிர்ந்தது  பன்னிர‌ண்டு கனிந்தது
மெதுவாய் முதிர்ந்தது இளமைக்குள்!!

வரவேற்புரை - குமாரி சுசித்திராவின் ஹரி கதா நிகழ்ச்சி - வி.எஸ்.எஸ்.-நொய்டா


கதைகள் சொல்வதும் கதைகள் கேட்பதும்
காலம் காலமாக தொடரும் கதை
தாத்தா-பாட்டி சொன்ன கதை
பேரன்-பேத்தி கேட்ட கதை
காவியங்களை வளர்த்த கதை
காப்பியங்களை தொகுத்த கதை
உறங்கும் முன்னால் உரைத்த கதைகள்
உள்ளம் தனிலே விதைத்த விதைகள்
இனிக்க இனிக்க சுவைத்த தெல்லாம்
இன்று ஏதோ கனவாய் தோன்றும்
ஆனாலும்
கதையின் முடிவும் தொடர்கதைதான்
தொடங்கும் தொடரும் வளர்கதைதான்
தாத்தா-பாட்டி கூட TV பெட்டி போட
பேரன்-பேத்தி எல்லாரும் சேர்ந்தே பார்க்கும் காலம்
மொழிகள் யாவும் உண்டு அழுகை சிரிப்பு உண்டு
மின்வெட்டோ கேபிள் கட்டோ மொபைல் சீறும்
மற்ற பில்களும் ஏறும் இருந்தும் சுவையாய் மாறும்
இதிலே இறை பக்தியை வளர்ப்பவை
ஹரிகதை ..கதாகலாட்சேபம்
கதையோடு கவிதை வரும்
கதையோடு இசையும் வரும்
கதையோடு அபினயம் வரும்
கதையோடு தத்துவம் தரும்
பண்பாட்டை வளர்க்கவும்
கலாச்சாரம்  நிலைக்கவும்
பகுத்தறிவை கொடுக்கவும்
பக்தியைப் பறப்பவும் இதுவே channel
அதற்கு இறைவனின் அருளும் மெய்ஞான குருவும்
பொருமையும் திறமையும் நிகழ்கால சாதுர்யமும் தேவை
அனந்தராம தீஷிதர் கிருபான்ந்தவாரியார் கீரன் அப்போது
விஷாக ஹரி  ஆராஅமுதச்சாரியார்   சுசித்திரா இப்போது
தஞ்சை திருமதி கமலா மூர்த்தி பாட்டி
குருவாகி இன்று உருவாகி வந்த பேத்தி
டி என் சேஷகோபாலனிடம் பத்மா சாண்டியல்னிடம் இசைபெற்று
பல மேடைகள் வாழ்த்துக்களொடு இன்று நம் முன்!! 

கேந்த்ரிய விநாயகப் புலரே -


கேந்த்ரிய விநாயகப் புலரே
(27-06-2004)

கங்கை கீழ்புறமும் யமுனை மேல்புறமும்
        அமைந்ததோர் சோலையருகே
நங்கை யால்வளர் மாமஹாபாரதம்
        விளைந்ததோர் இந்திரபிரஸ்தம்
தங்கை காளியோடு கோபாலன் குழலூதி
        வலம்வந்த நதிபெற்றவா
துங்கம ளித்து துந்தியை நிறைத்து வளர்           
        கேந்திரிய விநாயகப் புலரே               (1)
துங்கம் - வெற்றி / தூய்மை         


மங்கை தன்பங்கானச் சங்கடமோசனுடன்
        மால்மருகன் கோள்களெல்லாம்
எங்குள முண்டோ அங்குதான் என்று
        தங்கிட ஆர்வம்கொண்டு
இங்கே அருளோச்ச ஊர்வலம் கரிமீது
        அசைந்தாடி வந்தசுமுகா
அங்கை மகிமையுற வித்தகா வா! செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (2)

நலம்புரிய  வந்தாய் நகர்தனை அலங்கரித்தாய்
        நாமகள் போற்றும் களிறே
வலம்புரியா யின்று வரம்நல்குமே சிவ
        நாமஞ்சொல் கற்ற ஒளியே
பலம்தந்து பாரினில் பக்தரை ஆற்றவே
        உளம்தந்த ஒற்றைக் கொம்பே
குலம்வாழ அருள்செய் கும்பிடுவோம் செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (3)

அறங்காண வழிகாட்டி பொருளீட்ட வகைக்கூட்டி
        வளமீட்டும் வன்னிமலரே
திறமின்பம் நிறையுற்று வீடுபேற்றளிக்கும்
        முழுமுதற் தேவர் களியே
துறவறம் தந்துநல் முக்தியும் வழங்கிநில்
         இமயம் வாழ் வெற்றிகளபே
நறவத்தில் குளிக்கும் கும்பிடுவோம் செல்வக்       
        கேந்திரிய விநாயகப் புலரே                (4)
  நறவம் - தேன் / பால்

ஆக்கலுன் ஆற்றல் காத்தலுன் கருணை
        அழித்தலின் மொத்தவடிவே
ஊக்கமாய் மூலத்தில் ஆதரமாய் எழுந்து
         சித்திகள் எட்டும் வழியே
காக்கும் சித்தியின் புத்தியின் பதியாகி
         யோகத்தைக் காட்டும் குருவே
நீக்கமற நெஞ்ஞிலே தேக்க மகற்று செல்வக்
        கேந்திரிய விநாயகப் புலரே                (5)